கவியாகிய எழுதுகோல்கள்...!
― கவியாகிய எழுதுகோல்கள்...! காகிதங்கள் பல கொண்டு கவி எழுத ஆசைகொள்கிறேன்காகிதங்களில் கிறுக்க எழுதுகோல் தேடினேன் பூமியின் கதவோரத்தில் எழுதுகோல்கள் தீர்ந்து விட்டதாக ஒரு அட்டை அருகிலிருக்கும் நிலாவிற்கு செல்கிறேன் எழுதுகோல் பெற்றுவரநிலாவின் வாயிற்காப்போன் லஞ்சமாக என் காகிதங்களை கேட்கிறான்... காகிதங்களை கொடுக்க மனமின்றி திரும்பிவிடுகிறேன்பலயிடங்களில் அலைந்தும் எழுதுகோல்கள் கிடைக்கவில்லைஎனக்கான எழுதுகோலை நானே தயாரிக்க முடிவெடுத்தேன்பிரமாண்டமாக அடுப்பினை தயாரித்து அதனுள் பொன்னையும் -வைரத்தையும் இட்டு [...].










